sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம்

/

 பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம்

 பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம்

 பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடிகளால் கட்டடம் வலுவிழக்கும் அபாயம்


ADDED : நவ 13, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 13, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளால், கட்டடம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது.

உத்திரமேரூரில், காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்குள்ள, பள்ளி கட்டட சுவரில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. மரத்தின் வேர்கள் நாளடைவில் வளர்ந்து, கட்டடம் வலுவிழந்து அதன் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:

உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமீப நாட்களாக கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. கட்டடங்களை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படாமல் உள்ளன.

இதிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் வகுப்பறைக்குள் வருகின்றன. மேலும், பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us