sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

/

ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஏரிக்கரை சாலையில் கும்மிருட்டு மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்


ADDED : பிப் 02, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடில் இருந்து, சின்ன காஞ்சிபுரம், சி.வி.ராஜகோபால் தெரு, கே.எம்.அவென்யூ, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர், அல்லாபாத் ஏரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், சாலையோரம் உள்ள ஏரிக்கரைக்கு தடுப்புச்சுவர் இல்லை. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகளும் பழுதடைந்ததால், இரவு நேரத்தில் ஏரிக்கரை சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், இப்பகுதியில் வசிப்போரும், இச்சாலை வழியாக செல்லும் பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், ஏரிக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையாரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும், சாலை வளைவில் வேகமாக வரும் வாகனங்களும் நிலை தடுமாறி ஏரியில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, அல்லாபாத் ஏரிக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெருமின்விளக்குகளை சீரமைக்கவும், ஏரிக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்கவும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us