ADDED : அக் 26, 2024 07:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், நெல்வாய் கிராமம், இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58; விவசாயி. இவர், நேற்று, காலை 9:00 மணிக்கு, தன் கறவை பசுவை அங்குள்ள மேய்ச்சல் பகுதிக்கு ஓட்டி சென்றார்.
அங்கு கயிறு வாயிலாக பசுவை கட்டியபோது, அவரது வயிற்றுப் பகுதியில் பசு முட்டியது. இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.