ADDED : பிப் 09, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை தேசிய குடற்புழு நீக்க நாள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, 1 முதல் 19 வயது வரையுள்ள, 3.81 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 'அல்பென்டசோல்' என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
அதேபோல், 20 முதல் 30 வயதுள்ள, 83,000 பெண்களுக்கும் இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் என, அனைத்து இடங்களிலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் வாயிலாக, மாத்திரை வழங்கப்பட உள்ளது.
எனவே, அனைவரும் இம்மாத்திரையை பயன்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். விடுபட்டோருக்கு, வரும் 17ம் தேதி வழங்கப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.