sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

/

ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்


ADDED : பிப் 11, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏனாத்துார்வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க, காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையோரம் நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக வழிந்தோடி, சாலையோரம் குட்டைபோல தேங்கியுள்ளது.

இந்த நீரில், டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மேலும், தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில், ஏனாத்துார் ஊராட்சி அலட்சியமாக இருப்பதால், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us