/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறையில் மயங்கி விழுந்த டிரைவர் பலி
/
கழிப்பறையில் மயங்கி விழுந்த டிரைவர் பலி
ADDED : பிப் 15, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம்:திருவண்ணாமலை மாவட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னைகுட்டி, 42, டிரைவர். ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், உடன் பணியாற்றும் டிரைவர்கள் நிறுவனத்தின் கழிப்பறைக்கு சென்றபோது, அன்னைகுட்டி மயங்கி விழுந்திருப்பதை கண்டனர்.
இதையடுத்து, அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.