sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

/

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்


ADDED : மார் 23, 2025 12:11 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், நேற்று, காலை 5:00 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம் பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

மூன்றாம் நாள் உத்சவமான நாளை, காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம், வரும் 28ம் தேதி, காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது.

வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை நல்லப்பா பாஷ்யகாரர் திருவம்சத்தார், பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us