sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டு அறைகளை நோட்டமிடும் மர்ம நபர் 'சிசிடிவி' கேமரா காட்சியால் அச்சம்

/

வீட்டு அறைகளை நோட்டமிடும் மர்ம நபர் 'சிசிடிவி' கேமரா காட்சியால் அச்சம்

வீட்டு அறைகளை நோட்டமிடும் மர்ம நபர் 'சிசிடிவி' கேமரா காட்சியால் அச்சம்

வீட்டு அறைகளை நோட்டமிடும் மர்ம நபர் 'சிசிடிவி' கேமரா காட்சியால் அச்சம்


ADDED : பிப் 22, 2024 11:36 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியம், அவளூர் கிராமம்,டி.எஸ்.பி., சிட்டி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவின் குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக படுக்கை அறைகளை மர்ம நபர் நோட்டமிடுவதாக அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராவில் இது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

அந்த, 'சிசிடிவி' கேமரா காட்சியில், இரவு 10:00 மணி அளவில், தலையில் தொப்பி அணிந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் ஜன்னல் வழியாக படுக்கையறையை நோட்டமிடுவதும், பின் அடுத்த வீட்டிற்கு நடந்து செல்வதும் தெரியவந்துள்ளது.

இது அப்பகுதியினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவளூர் டி.எஸ்.பி., சிட்டி தெருவில் போதுமான தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்தாததால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

இந்நிலையில், வீட்டு அறைகளை நோட்டமிடும் மர்ம நபரின் வீடியோ காட்சி அப்பகுதியினர் இடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

எனவே, இத்தெருவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவதோடு, இரவு நேரத்தில் குடியிருப்புகளை சுற்றித் திரியும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் தானாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாகரல் போலீசார் கூறுகையில், ''அவளூரில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் மர்ம நபரின் அச்சுறுத்தல் உள்ளதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us