sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி

/

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி


ADDED : நவ 08, 2024 09:40 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம் மலையம்பாக்கம் ஊராட்சியில், வடக்குதாங்கல் ஏரி உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேலான நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது, அந்த பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு, விவசாய நிலம் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால், வடக்குதாங்கல் ஏரி நீர், பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஏரி அருகே வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி மற்றும் மாங்காடு செல்லும் சாலை உள்ளது.

இந்நிலையில், இந்த ஏரியில் மண் கொட்டி நிரம்பி, ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி நிலம் சுருங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஏரி முழுதும் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போகும் ஆபத்து உள்ளது. வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us