sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு தாய்வீட்டு சீர் வழங்கிய வருவாய் துறையினர்

/

அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு தாய்வீட்டு சீர் வழங்கிய வருவாய் துறையினர்

அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு தாய்வீட்டு சீர் வழங்கிய வருவாய் துறையினர்

அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு தாய்வீட்டு சீர் வழங்கிய வருவாய் துறையினர்


ADDED : மார் 10, 2024 01:13 AM

Google News

ADDED : மார் 10, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், 100 ஆண்டு பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் மயானப் பிரவேசம் மஹோற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 7ம் தேதி துவங்கிய நடப்பாண்டு விழா, மார்ச் 16 அன்று நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், விழாவின் மூன்றாம் நாளான நேற்று, அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் துறை சார்பில், சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:

இக்கோவிலுக்கு, ஒவ்வோர் ஆண்டு மயானப் பிரவேசம் மஹோற்சவம் நிகழ்ச்சிக்காக, வருவாய்த் துறை சார்பில், தாய் வீட்டு சீதனம் என்ற பெயரில், சீர்வரிசைப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பன்னெடுங்காலமாக தொடர்கிறது.

அதன்படி, நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான நேற்று, கோட்டாட்சியர் சரவண கண்ணன், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் இணைந்து, சீர்வரிசை அடங்கிய பொருட்களை வழங்கினர்.

இன்று, ஞாயிற்றுக்கிழமை, காலை 7.00 மணிக்கு அம்மன் கவச ஊர்வலத்தை தொடர்ந்து, பலி சாத்துதல், அக்னி சட்டி ஊர்வலம் முடிந்து, பிற்பகல் 2.00 மணிக்கு மயானக் கொள்ளை விழா நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us