sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்

/

சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்

சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்

சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்


ADDED : பிப் 18, 2025 06:10 AM

Google News

ADDED : பிப் 18, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் - கலியாம்பூண்டி சாலையில் இருந்து பிரிந்து, பெருநகர் மேட்டூர் செல்லும் சாலை உள்ளது.

இச்சாலையை பயன் படுத்தி, அப்பகுதி மக்கள் உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

இந்த சாலையின் ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதி குடியிருப்புகள், விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின்கம்பிகள் வாயிலாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இங்குள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து மின் கம்பிகள் வெளியே தெரிகிறது.

சேதமடைந்த மின் கம்பம் எந்த நேரத்திலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து, துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கம்பத்தை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us