sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெள்ள பாதிப்பின் போது கொள்ளையடித்தவர் சிக்கினார்

/

வெள்ள பாதிப்பின் போது கொள்ளையடித்தவர் சிக்கினார்

வெள்ள பாதிப்பின் போது கொள்ளையடித்தவர் சிக்கினார்

வெள்ள பாதிப்பின் போது கொள்ளையடித்தவர் சிக்கினார்


ADDED : ஜன 04, 2024 08:50 PM

Google News

ADDED : ஜன 04, 2024 08:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:'மிக்ஜாம்' புயல் பாதிப்பால் கடந்த மாதம் 4ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், வெள்ளக்காடான பகுதிகளில் குன்றத்துார் அடுத்த வரதராஜபுரமும் ஒன்று. பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதில், ராஜிவ் நகரில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஐந்து குடும்பங்கள், படகு மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தண்ணீர் வடிந்த பின் வீடு திரும்பினர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஐந்து வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு, 53 சவரன்நகை, 1.60 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, சோமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 24, என்பது தெரிய வந்தது.

தலைமறைவாக இருந்த சூர்யாவை, சோமங்கலம் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, 15 சவரன் நகையை பறிமுதல்செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us