sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாலம் இல்லாததால் தண்ணீரில் உடலை எடுத்து செல்லும் அவலம்

/

 பாலம் இல்லாததால் தண்ணீரில் உடலை எடுத்து செல்லும் அவலம்

 பாலம் இல்லாததால் தண்ணீரில் உடலை எடுத்து செல்லும் அவலம்

 பாலம் இல்லாததால் தண்ணீரில் உடலை எடுத்து செல்லும் அவலம்


ADDED : டிச 23, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி: விருதசீர நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என, கணபதிபுரம் கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், கணபதிபுரம் காலனி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் இறந்தவர்களை உடலை, விருதசீரநதி கரை ஓரம் புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர்.

தற்போது, விருதசீரநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நதியில் இறங்கி மறு கரையில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது.

நேற்று, கணபதிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஒருவர் இறந்து விட்டார். அவரின் உடலை, அவரது உறவினர்கள் விருதசீர நதியில், இடுப்பளவு நீரில் இறங்கி சென்று அடக்கம் செய்து விட்டு வந்தனர்.

விருதசீரநதியில், தண்ணீர் செல்லும் போது, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே, விருதசீர நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என, கணபதிபுரம் கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us