/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ., நடக்க வேண்டிய அவதி
/
ரேஷன் பொருள் வாங்க 3 கி.மீ., நடக்க வேண்டிய அவதி
ADDED : ஜன 04, 2025 01:49 AM
காஞ்சிபுரம்:செங்கல்ராயபுரம் கிராமத்திற்கு, பகுதிநேர ரேஷன் கடை துவக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின் குமார் அளித்த மனுவில்கூறியதாவது:
பூசிவாக்கம் கிராமத்தில்,600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதில், செங்கல்ராயபுரம், விநாயகபுரம் மேட்டு தெரு ஆகிய பகுதிவாசிகளும் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இக்கிராமத்தினர், 3 கி.மீ., துாரம் கடந்து வந்து, ரேஷன் பொருட்களைவாங்கி செல்கின்றனர். ஒரு சில மாதங்களில், கிராம மக்கள் வருவதற்குள் பொருட்கள் தீர்ந்து விடுகிறது.
இதனால், செங்கல்ராயபுரம், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க, செங்கல்ராயபுரம் கிராமத்தில் தனியாக பகுதிநேர ரேஷன் கடை துவக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

