/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : நவ 12, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்: ஜார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் ஓரான், 34. ஒரகடம் அருகே, எரையூர் கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த அக்., 9ம் தேதி இரவு, மது போதையில் வீட்டு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.