/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி
ADDED : ஜன 30, 2024 03:48 AM
குன்றத்துார் : மாங்காடு நகராட்சி, பாலாஜி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டு மாடியில் கட்டுமான பணி நடக்கிறது.
இந்நிலையில், மனோகரன் மகன் விக்னேஷ், 30, குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோமசுந்தரம், 65, ஆகியோர், வீட்டின் மாடியில் திருஷ்டி பொம்மை வைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
அப்போது திருஷ்டி பொம்மையில் இருந்த கம்பி, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் உரசியது.
இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, கருகிய நிலையில் தரையில் விழுந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சோமசுந்தரம் நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.