sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி

/

மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி

மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி

மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர் பலி


ADDED : ஜன 30, 2024 03:48 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : மாங்காடு நகராட்சி, பாலாஜி அம்பாள் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது வீட்டு மாடியில் கட்டுமான பணி நடக்கிறது.

இந்நிலையில், மனோகரன் மகன் விக்னேஷ், 30, குன்றத்துார் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோமசுந்தரம், 65, ஆகியோர், வீட்டின் மாடியில் திருஷ்டி பொம்மை வைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அப்போது திருஷ்டி பொம்மையில் இருந்த கம்பி, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின் ஒயரில் உரசியது.

இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து, கருகிய நிலையில் தரையில் விழுந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சோமசுந்தரம் நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us