sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

/

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை


ADDED : அக் 27, 2025 12:29 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் உள்ள அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், 7ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக பெருவிழா நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது.

அதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மஹா அபிஷேகமும், யாக சாலை பூஜை, யாக வேள்வியும், காலை 8:30 மணிக்கு சங்காபிஷேகமும், காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும் தொடர்ந்து வருஷாபிஷேகமும் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு, அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர்.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் திருப்பணி குழுவினர், கிளார் கிராம பொதுமக்கள், அகத்தீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us