/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நிறைவு
/
கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நிறைவு
ADDED : நவ 22, 2024 07:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவிலில், கடந்த 56 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2014ம் ஆண்டு முதல் கோவிலில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தம் என அழைக்கப்படும் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போற்சவம், மூன்று நாட்கள் விமரிசையாக நடந்து வந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்ததால், நான்கு ஆண்டுகளாக தெப்போற்சவம் நடைபெறவில்லை.
பல்வேறு திருப்பணிகள் முடிந்து, கடந்த பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இந்நிலையில், ஏழாம் ஆண்டு, முதல் நாள் தெப்போற்சவம், கடந்த 20ம் தேதி இரவு துவங்கியது.
இதில், பல்வேறு மலர்கள் மற்றும் வண்ணமயமான மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து முறை உலா வந்தார்.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஏழு முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளான நேற்று ஒன்பது முறையும், அம்பிகையுடன் சுவாமி தெப்பத்தில் உலா வந்தார்.
விழாவிற்கான ஏற்பாட்டை கோயில் செயல் அலுவலர் நடராஜன், மேலாளர் சுரேஷ், கோவில் பணியாளர்கள், திருக்குள தெப்போற்சவ டிரஸ்ட் காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் செய்திருந்தனர்.

