sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்

/

மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்

மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்

மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்


ADDED : ஜன 13, 2024 12:43 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த சாலை ஆறு வழிச்சாலையாக 2021ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் மட்டும், சாலை விரிவாக்கம் செய்யாமல் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, 2022 ஜனவரியில், 26.44 கோடி ரூபாய் மதிப்பில் படப்பை பஜார் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

இரண்டு ஆண்டுகளான நிலையில், 30 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணியால், படப்பையில் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us