sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி

/

திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி

திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி

திருபுட்குழி கோவில் காலையில் திறக்காததால் பக்தர்கள் அவதி


ADDED : நவ 02, 2024 12:44 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் குழந்தை பேறு வேண்டி தினசரி நேர்த்திக்கடன் செய்ய பக்தர்கள், கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு சவுகரியமாக, காலை 6:00 மணி அளவில் கோவில் திறப்பதில்லை. மாறாக, 7:00 மணிக்கு மேல் திறக்கின்றனர்.

இதனால், மாத அமாவாசை மற்றும் குழந்தை பேறு வேண்டி வரும் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தினசரி, காலை 7:00 மணிக்கு முன்னதாக கோவில் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, திருட்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛ஆகம விதிகளின்படி, காலை 7:00 மணிக்கு தான் கோவில் திறக்க வேண்டும் என கூறுகின்றனர். அமாவாசை காலங்களில், முன் கூட்டியே கோவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us