ADDED : நவ 19, 2024 06:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு, அனுஷ்டானகுளம் அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு கார்த்திகை மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 11:00 மணிக்கு ராமானுஜருக்கு திருவாதிரை சிறப்பு திருமஞ்சனம், துாப தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து ராமானுஜர் வெள்ளி கவசம் மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பபட்டது.