sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழ வியாபாரியை கடத்தி கழுத்தில் வெட்டியோர் கைது

/

பழ வியாபாரியை கடத்தி கழுத்தில் வெட்டியோர் கைது

பழ வியாபாரியை கடத்தி கழுத்தில் வெட்டியோர் கைது

பழ வியாபாரியை கடத்தி கழுத்தில் வெட்டியோர் கைது


ADDED : மார் 28, 2025 08:38 PM

Google News

ADDED : மார் 28, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை,:படப்பை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாரதிராஜா, 42. இவர், படப்பை பஜார் பகுதியில் சாலையோரம் பழக்கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு படப்பையைச் சேர்ந்த சுகன், 28, என்பவருடன், படப்பை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தியுள்ளார்.

அப்போது, பாரதிராஜாவின் மனைவியை பற்றி சுகன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், பாரதிராஜா சுகனை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற சுகன், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, 24, ராம்குமார், 31, லட்சுமணன், 38, ஆகியோருடன் சேர்ந்து, பாரதிராஜாவை ஆட்டோவில் கடத்தி சென்று, சரமாரியாக தாக்கி கத்தியால் கழுத்தில் வெட்டி தப்பினர்.

படுகாயம் அடைந்த பாரதிராஜாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுகன், ராம்குமார், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன் ஆகிய நான்கு பேரையும், மணிமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us