sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மகனை கொன்றவரை கொலை செய்ய திட்டம் ஊராட்சி தலைவரின் கணவர் உட்பட மூவர் கைது

/

மகனை கொன்றவரை கொலை செய்ய திட்டம் ஊராட்சி தலைவரின் கணவர் உட்பட மூவர் கைது

மகனை கொன்றவரை கொலை செய்ய திட்டம் ஊராட்சி தலைவரின் கணவர் உட்பட மூவர் கைது

மகனை கொன்றவரை கொலை செய்ய திட்டம் ஊராட்சி தலைவரின் கணவர் உட்பட மூவர் கைது


ADDED : பிப் 12, 2024 06:15 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி தலைவர் குமுதா. இவரது மகன் ஆல்பர்ட், 30, தி.மு.க.,பிரமுகர். தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, கட்டுமான பொருட்கள் வினியோகிப்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஆக.,5ம் தேதி, எச்சூர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் வெட்டி கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக கூலிப்படை மூலம் ஆல்பர்டை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி, சுரேஷ் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், ஆல்பர்டின் தந்தை டோம்னிக், கார் ஓட்டுனர் தேவன்,28, ஆகியோர் கூலிப்படைக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, சுரேஷை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து டோம்னிக், தேவன், கூலிப்படையைச் சேர்ந்த முருகன் ஆகிய மூவரை சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us