sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ரோந்து போலீசாரை கல்வீசி தாக்கிய ரவுடிகள் மூவர் கைது: ஒருவர் 'எஸ்கேப்'

/

 ரோந்து போலீசாரை கல்வீசி தாக்கிய ரவுடிகள் மூவர் கைது: ஒருவர் 'எஸ்கேப்'

 ரோந்து போலீசாரை கல்வீசி தாக்கிய ரவுடிகள் மூவர் கைது: ஒருவர் 'எஸ்கேப்'

 ரோந்து போலீசாரை கல்வீசி தாக்கிய ரவுடிகள் மூவர் கைது: ஒருவர் 'எஸ்கேப்'


ADDED : ஜன 03, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி: போலீசாரை தாக்கிய ரவுடிகளில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓட்டேரி, ஏகாங்கிபுரம், ராஜிவ்காந்தி நகர் பகுதி யில் ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மங்களபுரம் குடியிருப்பு பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடி அப்பு என்பவரை மடக்கி பிடித்தனர்.

அவர், கையில் இருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்று, திடீரென தன் கை மற்றும் கழுத்து பகுதியிலும் வெட்டி கொண்டார்.

போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்போது, அப்புவின் கூட்டாளிகள் போலீசார் மீது கல்வீசி, அங்கிருந்து தப்பி சென்றனர்.

காயமடைந்த ரவுடி அப்பு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து அங்கிருந்து தலைமறைவானார்.

இது குறித்து விசாரித்த போலீசார், பெரம்பூர் மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த சூர்யா, 29 விஜயகுமார், 28, சுகுமாரன், 45 ஆகிய மூன்று ரவுடிகளை நேற்று கைது செய்தனர். அப்புவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us