/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிருஷ்ணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
கிருஷ்ணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : செப் 30, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியையொட்டி, 8:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் திருக்கல்யாண உற்சவ வைபவ நிகழ்ச்சி நடந்தது.
பள்ளூர் கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார் குழுவினர் ராதா, ருக்மணிக்கு, கிருஷ்ணர் சார்பாக மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து, இரவு 11:00 மணி அளவில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.