sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்

/

பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்

பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்

பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்


ADDED : ஏப் 28, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழம்பி:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

பொன்னேரிக்கரை, ஆரியபெரும்பாக்கம், கீழம்பி, முசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.

இதில், கீழம்பி மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், சில பராமரிப்பு பணிகள் காரணமாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சர்வீஸ் சாலை வழியாக மேம்பாலத்திற்கு கீழே, ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, கீழம்பி மேம்பாலம் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது, வேலுார் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் புறநகர் செல்லும் சாலை இணைக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us