/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களுக்கு பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மாணவர்களுக்கு பயிற்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மார் 02, 2024 11:13 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரிசத்திரம் கிராமத்தில், பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. நேற்று, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமை வகித்தார்.
இங்கு, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஏ.சி., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் வாயிலாக, ஆண்டுதோறும் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வழங்கப்படும் என, பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சத்தியராஜ் தெரிவித்தார்.

