sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நிழற்குடையின்றி பயணியர் அவதி

/

நிழற்குடையின்றி பயணியர் அவதி

நிழற்குடையின்றி பயணியர் அவதி

நிழற்குடையின்றி பயணியர் அவதி


ADDED : அக் 13, 2024 01:06 AM

Google News

ADDED : அக் 13, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் -- சாலவாக்கம் இணைப்பு சாலையில், அருங்குன்றத்தில் இருந்து, பழவேரி வழியாக கரும்பாக்கத்தை இணைக்கும் கூட்டுச்சாலை உள்ளது.

கரும்பாக்கம், அரும்புலியூர், பழவேரி , சீத்தாவரம் உள்ளிட்ட கிராமத்தினர், இக்கூட்டு சாலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து சாலவாக்கம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் இங்கிருந்து பல பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர். இக்கூட்டுச்சாலைக்கான பேருந்து நிறுத்தத்தில், இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.

இதனால், இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், குறிப்பாக மாணவர்கள் மழை நேரங்களில் அவதிப்படுகின்றனர்.

எனவே, இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us