/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
/
காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : மார் 25, 2025 07:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில், சர்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மானாம்பதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.
இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் ஆகியஅறிகுறிகள் காணப்பட்டால், அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தபட்டது.
பின், பொதுமக்கள்காசநோய் தடுப்பது குறித்து உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்சந்தோஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.