/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ-- - வீலர் தீ பிடித்து மெக்கானிக் படுகாயம்
/
டூ-- - வீலர் தீ பிடித்து மெக்கானிக் படுகாயம்
ADDED : அக் 05, 2024 11:20 PM

திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவி ஸ்கூட்டியில் நேற்று காலை திருத்தணி சென்றார். திருத்தணி - கன்னிகாபுரம் காலனி பகுதி அருகே பழுதாகி நின்றது.
திருத்தணியில் உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு மொபைல் போன் மூலம் மாணவி தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மெக்கானிக் சத்யா, 31 என்பவர் ஸ்கூட்டியை பழுது பார்க்க சென்றார். பழுதுபார்க்கும் போது, திடீரென ஸ்கூட்டி தீப்பிடித்து எரிந்தது.
இதில் சத்யா, முகத்தில் லேசான தீக்காயத்துடன் தப்பினார். அக்கம்பக்கத்தவர்கள் தண்ணீருடன் வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் இரு சக்கர வாகனம் முழுதும் எரிந்து சாம்பலானது.
சத்யா திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.