ADDED : ஏப் 25, 2025 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், உத்திரமேரூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை பார்த்தவுடன் வேகமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் 1 கிலோ கஞ்சாவை பையில் மறைத்து, வந்தவாசிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.
தொடர்ந்து சென்னை அமைந்தகரையை சேர்ந்த இளங்கோ, 43, விக்னேஷ், 38, இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

