ADDED : ஜூலை 07, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், வெவ்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் குட்கா போதை பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, களினுார் கிராமம், பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண், 25; நேற்றுமுன்தினம், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்ற வரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 49; இவர், புதுப்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவரை கைது செய்த சிவகாஞ்சி போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.