ADDED : நவ 09, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, கமாளம்பூண்டி கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'பொலிரோ' காரில் டோர், பேட்டரி மற்றும் டிராக்டர் ஏர் கலப்பை ஆகியவை திருடு போனது.
இதுக்குறித்து, தோட்ட காவலாளி ஜோதி, 65, உத்திரமேரூர் போலீசீல் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று, உத்திரமேரூர் போலீசார், காவனூர் புதுச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விவசாய தோட்டத்தில் பொருட்கள் திருடியது தெரிந்தது. இதையடுத்து, ஜீவா என்கிற அக்பர், 24, தென்னவன், 19, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

