/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - -வீலர்கள் மோதல் இருவர் காயம்
/
டூ - -வீலர்கள் மோதல் இருவர் காயம்
ADDED : நவ 23, 2024 08:09 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, வானிய பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 30; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று மாலை, நண்பர் ஜெயகுமார், 28, என்பவருடன், 'ஹோண்டா ஷைன்' டூ - -வீலரில், எல். எண்டத்தூர் சாலையில், நீரடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 'பஜாஜ் பல்சர்' டூ - -வீலரில், குப்பைநல்லூரைச் சேர்ந்த, ஸ்ரீதர், 29, என்பவர், உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டஞ்சேரி கூட்ரோட்டில் இரண்டு டூ - -வீலர்களும் மோதிக் கொண்டன.
இதில் படுகாயமடைந்த பச்சையப்பன் ,ஸ்ரீதர் ஆகிய இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். .உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.