sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்

/

மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்

மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்

மேயர் ஆதரவாளர்கள் இருவர் கட்சியிலிருந்து...நீக்கம்!:29ல் வெளிப்படை ஓட்டெடுப்பு நடத்த திட்டம்


UPDATED : ஜூலை 27, 2024 12:50 AM

ADDED : ஜூலை 27, 2024 12:46 AM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 12:50 AM ADDED : ஜூலை 27, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் ஆதரவாளர்கள் இருவர் தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வரும் 29ல் நடைபெறும் மேயர் மீதான ஓட்டெடுப்பு, வெளிப்படை ஓட்டெடுப்பாக நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, வரும் 29ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது. மேயருக்கு எதிராக, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே கமிஷனர் செந்தில்முருகன், மேயருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கடந்த திங்கள், செவ்வாய் என, இரு நாட்களும், கமிஷனர் செந்தில்முருகன் அறையில் அவரை முற்றுகையிட்டும், மாநகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தையும் கவுன்சிலர்கள் நடத்தினர்.

மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தொடர்ந்து பிரச்னை செய்வதால், அவர்களை சமாதானம் செய்ய, தி.மு.க.,வின் அமைப்பு செயலர் அன்பகம் கலை, காஞ்சிபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார்.

பொன்னேரிக்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில், தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, நேற்று காலை பேச்சு நடத்தினார். ஆனால், முடிவு எட்டப்படாததால், அதிருப்தி கவுன்சிலர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையே, மேயர் மகாலட்சுமியின் கணவரான, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜின் ஆதரவாளர்கள் இருவரை, கட்சியிலிருந்து தற்காலிகமாக நேற்று நீக்கியதால், மேயர் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

தி.மு.க.,வின், காஞ்சிபுரம் மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் என்பவரையும், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டில்லிகுமார் என்பவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார்.

கழக கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எதிர்தரப்பு கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுக்களே, இருவரின் நீக்கத்திற்கு காரணமாக இருக்கும் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மேயர் தரப்புக்கு ஆதரவான இருவரை கட்சியிலிருந்து நீக்கியதாலும், மாநகராட்சியில் பிரச்னை தொடர்வதாலும், மேயருக்கும், அவரது கணவருக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம், திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில், ஆக., 6ல், பணிக்குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

மாநகராட்சி டெண்டர்களை கையாளக்கூடிய பணிக்குழுவின் தலைவராக இருந்த கவுன்சிலர் சுரேஷ், தனது தலைவர் பதவியை ஐந்து மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளுக்கு புதிய மேயர் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஆக., 6ல் நடைபெற உள்ளது.

அன்றைய தினமே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக உள்ள பணிக்குழுவின் தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பணிக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை, கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வர்.

ஓட்டெடுப்பு வெளிப்படையாக நடக்கும்!


காஞ்சிபுரம் மாநகராட்சியில், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு, திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு, அண்ணா அரங்கத்தின் மாடியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில், 41 பேர் கூட்டத்தில் பங்கேற்று, மேயருக்கு எதிராக ஓட்டளித்தால் மட்டுமே, மேயர் பதவியிலிருந்து அவரை நீக்க முடியும். அவ்வாறு நடைபெறும் ஓட்டெடுப்பு மறைமுகமாக நடைபெறும் என கூறப்பட்டது.
அதாவது, பெட்டியில் தனது நிலைப்பாட்டை கவுன்சிலர்கள் செலுத்துவர். ஆனால், திங்கட்கிழமை நடைபெறும் ஓட்டெடுப்பு, கவுன்சிலர்கள் தங்களது கைகளை உயர்த்தி, வெளிப்படையாக நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக எந்தெந்த கவுன்சிலர்கள், மேயருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஓட்டளித்தனர் என்பது வெளிப்படையாக தெரியவரும்.



29ம் தேதி கூட்டத்துக்கு தடையில்லை


காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு கூட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சிந்தன், தாக்கல் செய்த மனு:மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. மேயராக, தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். இவருக்கு எதிராக, பெரும்பாலான கவுன்சிலர்கள், கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. பெரும்பான்மையை மேயர் நிரூபிக்க கோரி, 34 கவுன்சிலர்கள், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். எங்கள் மனுவுக்கு பதில் அளிக்காமல், மேயரை பாதுகாக்கும் விதமாக, மனுவை நிராகரித்து விட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு, வரும் 29ல் கூட்டம் நடக்கும் என ஆணையர் அறிவித்தார்.
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து நடத்தாததால், பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி, ஆணையரிடம் மனு அளித்தோம். ஆனால், அதற்கு முரணாக, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கூட்டத்தை அறிவித்துள்ளார். விதிகளின்படி, மேயரை நீக்க, ஐந்தில் நான்கு பங்கு ஆதரவு வேண்டும். எங்களிடம் 33 பேர் தான் உள்ளனர். தேவையான எண்ணிக்கையை விட, இது குறைவு. இதை தெரிந்து தான், மேயர் உடன் ஆணையரும் சேர்ந்து, கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கோரவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தான் கோருகிறோம்.
எனவே, வரும் 29ல், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கூட்டம் நடக்கும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க, கூட்டத்தை கூட்டும்படி, ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன், விசாரணைக்கு வந்தது. வரும் 29ல் நடப்பதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு தடை விதிக்க, நீதிபதி மறுத்து விட்டார்.








      Dinamalar
      Follow us