sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

/

சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

சாலை விபத்தில் பெண் உட்பட இருவர் பலி


ADDED : அக் 05, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் பணிபுரிகின்றனர். இவர்கள், விடுமுறை நாட்களில் குழுவாக சுற்றுலா செல்வது வழக்கம்.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் தடா அடுத்த வரதயப்பாளையம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல 10 பேர், ஐந்து பைக்குகளில் நேற்று காலை புறப்பட்டனர்.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனிமோல், 21, திருவண்ணாமலை சந்தோஷ், 21, ஆகியோர் டி.வி.எஸ்., ஸ்கூட்டி பைக்கில் சென்றனர். கவரப்பேட்டை அடுத்த புதுவாயல் அருகே, முன்னால் சென்ற 'எய்ச்சர்' லாரி ஓட்டுனர், அதன் வேகத்தை திடீரென குறைத்துள்ளார்.

அப்போது, பின்னால் வந்த சந்தோஷ் ஓட்டிய ஸ்கூட்டி, அந்த லாரியின் பின்னால் மோதி விபத்தில் சிக்கியது. தலைக்கவசம் அணியாத இருவருக்கும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றோர், '108' ஆம்புலன்ஸ் உதவியுடன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்தபோது, வரும் வழியில் ஆனிமோல் இறந்தது தெரிந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us