sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்

/

பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்

பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்

பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்


ADDED : டிச 22, 2024 12:15 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் திம்ம ராஜம்பேட்டை ஊராட்சிக்குஉட்பட்டது சீயமங்கலம் கிராமம்.இங்குள்ள மேட்டுத்தெரு பகுதியில், விநாயகர் கோவில் அருகே பொதுக்குளம் உள்ளது.

கடந்த காலத்தில் இப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாகஇருந்து வந்தது. தற்போதுபராமரிப்பின்றி, பயன்பாடுஇல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. குளத்தில் பாசி படர்ந்து, பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

மேலும், இந்த குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஒரு சிலர், தங்களது வீட்டு கழிவுநீரை குளத்தில் விடுவதோடு, குப்பை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.

இதனால், குளத்து தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி மற்றும் தொற்று நோய் ஏற்படக்கூடும் என, அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.

எனவே, சீயமங்கலம் பொதுக்குளத்தில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுத்து, குளத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us