sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பராமரிப்பு இல்லாத பொதுக் குளத்தால் ஒட்டிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு

/

பராமரிப்பு இல்லாத பொதுக் குளத்தால் ஒட்டிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு

பராமரிப்பு இல்லாத பொதுக் குளத்தால் ஒட்டிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு

பராமரிப்பு இல்லாத பொதுக் குளத்தால் ஒட்டிவாக்கத்தில் சுகாதார சீர்கேடு


ADDED : ஏப் 07, 2025 02:06 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒட்டிவாக்கம் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் பொதுக்குளம் உள்ளது.

கடந்த ஆண்டுகளில், இக்குளம் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. பாலாற்று குடிநீர் வசதி ஏற்பட்டதன் பின், நிலத்தடி நீர் மட்ட அதாரமாகவும், தற்போது கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுகளாக இக்குளம் முறையான பராமரிப்பின்மை காரணமாக முழுக்க பாசி படர்ந்து, பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. மேலும், சமீப காலமாக அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குளத்தில் கலந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு, தொற்று நோய் போன்றவைக்கு இக்குளத்து நீர் வழிவகுப்பதாக உள்ளது. குளத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், குளத்தை சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி, சுகாதாரமான முறையில் பராமரிக்க, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us