/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போந்துாரில் வர்ணம் பூசாத வேகத்தடை
/
போந்துாரில் வர்ணம் பூசாத வேகத்தடை
ADDED : மார் 14, 2024 01:59 AM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்து, மதர்ஷன் தொழிற்சாலையில் இருந்து போந்துார் செல்லும் பிரதான சாலை பிரிந்து செல்கிறது.
இந்த சாலையில், வாகனங்களால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெண்கள் மற்றும் வயதானோர் பெரும் சிரமத்திற்க ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல், அதில் ஏறி, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காய் அடைந்து வருகின்றனர்.
எனவே, இச்சாலையில் உள்ள வேகத்தடைகள்மீது வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

