sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேரோடு சாய்ந்த 120 ஆண்டு புளிய மரம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மறுவாழ்வு

/

வேரோடு சாய்ந்த 120 ஆண்டு புளிய மரம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மறுவாழ்வு

வேரோடு சாய்ந்த 120 ஆண்டு புளிய மரம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மறுவாழ்வு

வேரோடு சாய்ந்த 120 ஆண்டு புளிய மரம் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மறுவாழ்வு


ADDED : ஜன 11, 2024 01:06 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:எழும்பூர் அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளாக இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. அந்த மரம், மீண்டும் அதே இடத்தில் நடப்பட்டது.

சென்னை, எழும்பூர், அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளாக ஆணை புளியமரம் இருந்தது. கடந்த 2ம் தேதி, இந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்தது.

சாய்ந்த மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கு, அருங்காட்சியக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன் படி, கடந்த 8ம் தேதி, அருங்காட்சியக அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் பசுமை பூமி அறக்கட்டளை அமைப்புகளை சேர்ந்தோர் ஒன்றிணைந்து, சாய்ந்த புளியமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டனர்.

அருங்காட்சிய அதிகாரிகள் கூறியதாவது:

எழும்பூர் அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளாக நிழல் தந்த புளிய மரம், வேரோடு சாய்ந்தது. பார்வையாளர்கள் மற்றும் எங்கள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அதே இடத்தில் மரம் நடப்பட்டுள்ளது.

இது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us