sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்

/

உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஜூலை 05, 2025 10:19 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால், மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கூடுதல் கழிப்பறை கேட்டு பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூரில் உள்ள கேதாரிஸ்வரன் கோவில் தெருவில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 1,200 மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு, மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க, கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பழைய கட்டடத்தில் ஐந்து கழிப்பறைகளும், புதிய வகுப்பறை கட்டடத்தில் ஐந்து கழிப்பறைகளும் இருந்தது.

இதில், பழைய பள்ளி கட்டடம் சேதமடைந்து இருந்ததால், இரு மாதத்திற்கு முன் இடித்து அகற்றப்பட்டது.

அப்போது, கட்டடத்தில் இருந்த ஐந்து கழிப்பறைகளும் சேர்த்து இடிக்கப்பட்டன. தற்போது, புதிய கட்டடத்தில் உள்ள ஐந்து கழிப்பறைகள் மட்டுமே இயங்கி வருகிறது.

இங்கு, மாணவியர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதால், கழிப்பறைகள் போதிய அளவிற்கு இல்லாமல் உள்ளது. இதனால், மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய வசதி இல்லாமல் உள்ளது.

மேலும், பள்ளியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தாமதமாகி வருகின்றன.

தொடர்ந்து, கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அங்கேயே தேங்கும் நிலை உள்ளது. தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, உத்திரமேரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதலாக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த, துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us