sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : அக் 25, 2025 02:04 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு இரட்டை கால்வாய் துார்வாரும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் இருந்து அதியமான் நகர், எம்.ஜிஆர்., நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர் வழியாக, தேனம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், இரட்டை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் வட கிழக்கு பருவமழை துவங்கும்முன், இக்கால்வாய் துார்வாரி சீரமைக்கப்படும்.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இரட்டை கால்வாய் துார்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தற்போது, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகர் அருகில் கால்வாய் துார் வாரும் பணி நடந்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் யோரம் அமைந்துள்ள பகுதியில் மழைநீர் புகும் நிலை உள்ளது.

எனவே, இரட்டை கால்வாய் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us