/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடைகள் தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
/
கால்நடைகள் தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
கால்நடைகள் தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
கால்நடைகள் தொட்டிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2025 10:57 PM

களக்காட்டூர்: களக்காட்டூரில் உள்ள கால்நடை குடிநீர் தொட்டிக்கு, குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், 2018 - 19ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில், கால்நடை தொட்டிக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டது. மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் கால்நடை தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி தாகம் தீர்த்து வந்தன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், கால்நடை தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப அமைக்கப்பட்ட குழாய் உடைந்துள்ளதால், தொட்டியில் குடிநீர் நிரப்ப முடியாமல் உள்ளது.
எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்க அமைக்கப்பட்ட தொட்டிக்கு இணைப்பு கொடுத்து, குடிநீர் நிரப்பி வைக்க, களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

