/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 12:15 AM

முசரவாக்கம்,:முசரவாக்கம் பிரதான சாலையோரத்தில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் பிரதான சாலையோரம் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறுவதற்காக வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பை கொட்டப்பட்டும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க முசரவாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.