/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
புதர்மண்டிய மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 23, 2024 12:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு இந்திரா நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாய் மண்திட்டுகளாகலும், செடி, கொடிகளாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
ஒரே இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்புகளை சூழும் அபாய நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், செவிலிமேடு இந்திரா நகரில் மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.