/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 22, 2025 12:40 AM

திருப்பருத்திகுன்றம்,
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு, விப்பேடு ஊராட்சி, குண்டுகுளம் வழியாக கால்வாய்க்கு செல்கிறது.
இரு ஆண்டுகளுக்கு முன், குண்டுகுளத்தில் பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்தபோது, திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டது.
இதனால், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறிய மழைநீர் திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு செல்ல வழி இல்லாததால், குண்டுகுளம் மூவேந்தர் நகரில் கால்வாயில் கோரைபுற்கள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கடந்த ஆண்டு பருவமழைக்கு திருப்பருத்திகுன்றம் ஏரி பாதி அளவு கூட நிரம்பவில்லை. எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.