sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

/

திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

திருப்பருத்திகுன்றம் ஏரி கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 22, 2025 12:40 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பருத்திகுன்றம்,

காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு, விப்பேடு ஊராட்சி, குண்டுகுளம் வழியாக கால்வாய்க்கு செல்கிறது.

இரு ஆண்டுகளுக்கு முன், குண்டுகுளத்தில் பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்தபோது, திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டது.

இதனால், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறிய மழைநீர் திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு செல்ல வழி இல்லாததால், குண்டுகுளம் மூவேந்தர் நகரில் கால்வாயில் கோரைபுற்கள் வளர்ந்து கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், கடந்த ஆண்டு பருவமழைக்கு திருப்பருத்திகுன்றம் ஏரி பாதி அளவு கூட நிரம்பவில்லை. எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, திருப்பருத்திகுன்றம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us