sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்று படுகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

/

வேகவதி ஆற்று படுகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

வேகவதி ஆற்று படுகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

வேகவதி ஆற்று படுகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்


ADDED : அக் 29, 2025 11:46 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்: வில்லிவலம், தாங்கி வேகவதி ஆற்று படுகையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்ற அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் ஏரி அருகே துவங்கும் வேகவதி ஆறு, முசரவாக்கம், கீழ்கதிர்ப்பூர், காஞ்சிபுரம் நகர் மற்றும் தேனம்பாக்கம் வழியாக அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை பகுதிகளை கடந்து வில்லிவலம் அருகே பாலாற்றில் கலக்கிறது.

வில்லிவலம் மற்றும் தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வேகவதி ஆறு விவசாய நிலங்களுக்கு நலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், இப்பகுதி ஆற்றில் ஆகாய தாமரை உள்ளிட்ட தாவரங்கள் தற்போது அடர்த்தியாக வளர்ந்து தண்ணீரின் மேற்பரப்பில் படர்ந்துள்ளது. இதனால், ஆற்றில் நீரோட்டம் தடை படுவதுடன் சூரிய ஒளி தண்ணீருக்குள் செல்ல இயலாமல் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மண் வளம் பாதிக்கும் நிலை உள் ளது .

மேலும், இத்தண்ணீரில் குளித்தால் தோல் நோய் ஏற்படுவதுடன் ஆற்றின் சுற்றுசூழல் சமநிலையை பாதிக்கும் என அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.

எனவே, இப்பகுதி வேகவதி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரை உள்ளிட்ட தாவரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வேகவதி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு இல்லாமல் தண்ணீர் தேக்கம் உள்ளதால் இம்மாதிரியான தாவரங்கள் வளர்ந்து விடுகின்றன.

இந்த சீசன் கடந்ததும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப அவை தானாக அழியக்கூடும்.

எனினும், இதுகுறித்து ஆலோசித்து இந்த தாவரத்தால் பாதிப்பு உள்ளதெனில் அவைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us