sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

/

திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 17, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 17, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:திருப்புலிவனத்தில், ஓராண்டிலேயே சேதமடைந்த சன்னிதி தெரு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, சன்னிதி தெரு இணைப்புச் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து இருந்தது.

இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, 2024 --- 25ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 2.2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

இச்சாலை தரமாக அமைக்காததால் சேதமடைந்து வருகிறது. சாலை அமைத்து ஓராண்டே ஆன நிலையில், ஜல்லிகள் பெயர்ந்து உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சி துறையினர், திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த சன்னிதி தெரு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us