sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை

/

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : பிப் 15, 2025 07:52 PM

Google News

ADDED : பிப் 15, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 40,000 பேர் வசிக்கின்றனர். உத்திரமேரூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. உத்திரமேரூரில் இயங்கும் வட்டார அரசு மருத்துவமனையில், அப்பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் என ஆயிர கணக்கானோர் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால், விபத்து உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில் அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

அம்மாதிரியான சமயங்களில், நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அனுப்பும்போது, சிகிச்சைக்கான நேர தாமதம் உள்ளிட்ட காரணங்களால் சில சமயங்களில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனையை மேம்படுத்தி நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பல தரப்பு மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கூடுதல் படுக்கைகளுடன், மாதத்திற்கு 1000 பேர் வரையிலான உள் நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனையாக மேம்படுத்தப்படுகிறது. 13 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணி, 2023ம் ஆண்டு, பிப்ரவரியில் துவங்கியது.

தற்போது, பணி துவங்கி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றும் பணிகள் நிறவடைந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், பணியை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us