sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்

/

உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்

உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்

உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்


ADDED : டிச 14, 2024 11:22 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், பாலசுப்பிரமணியன் கோவில் உள்ளது. உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் முருகர் கோவில் இல்லாததால், இக்கோவிலுக்கு முருகர் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து வழிபடுவது வழக்கம்.

இந்த கோவிலில் கிழக்கு நோக்கி ஐந்து நிலையிலான ராஜகோபுரமும், வெளிப்பிரகார இடதுபுறம் ஊஞ்சல் மண்டபம், வலதுபுறத்தில் வசந்த மண்டபம், நடுவே பலிபீடம் மற்றும் கொடிமரம் என, அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது.

கருவறையில் முருகப்பெருமானான பாலசுப்பிரமணியன், 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது முன்புறம் வேலும், சேவல் கொடியும், பாதத்தின் அருகே மயில் வாகனம் உள்ளது.

இத்தலத்தில், முருகனின் இரு துணைவியாரான தெய்வானையும், வள்ளியும் ஒன்றாக வடிவம் கொண்டு, கஜவல்லியாக வீற்றிருப்பது அபூர்வ காட்சியாக உள்ளது.

இவ்வாறான சிறப்பு மிக்க இக்கோவிலின் வெளிப்புற வளாகம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. கோவிலை சுற்றி உள்ள நடைபாதை ஓரங்களில் முட்புதர்கள் மண்டியிட்டு காணப்படுகிறது. கோவில் அருகே மண்டபம் புதர் சூழ்ந்துள்ளது.

கோவிலை சுற்றி உள்ள செடி, கொடிகளை அகற்றாததால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர்.

எனவே, கோவில் வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us